மத்தியப்பிரதேசத்தில் நிலப்பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை
மத்தியப்பிரதேசம் மொரொனா மாவட்டம் லேபா கிராமத்தில் தரிசு நிலத்தில் கழிவு கொட்டுவதில் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது போலப் பலமுறை கிராமங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 வருடத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.